கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை… போலீசார் விசாரணை…

 

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை… போலீசார் விசாரணை…

மதுரை

மதுரையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் மர்மஉறுப்பு சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநர் காதர்மஸ்தான்(35). இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். காதர் மஸ்தான், மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் மது அருந்தி விட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்ற காதர் மஸ்தான் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று சோலை அழகுபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக, தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது உயிரிழந்த நபர் ஆட்டோ ஓட்டுநர் காதர் மஸ்தான் என்பது தெரியவந்தது.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை… போலீசார் விசாரணை…

மேலும், அவரது மர்ம உறுப்பு சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டதும் தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காதர் மஸ்தானுக்கு, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதனை இருவீட்டாரும் கண்டித்தும் அவர் உறவை தொடர்ந்து வந்ததும் தெரியவந்தது. எனவே, மஸ்தான் கள்ளகாதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.