மதுபோதையில் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை!

 

மதுபோதையில் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை!

திருச்சி

நாகையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை, சக நண்பர்களே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மருந்து கொத்தளத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் பிரகாஷ் (40). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்றிரவு, தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, பிரகாஷுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமடைந்து அவர், சிவபவித்திரன் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மதுபோதையில் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை!

இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், அவர்களை அந்த பகுதிமக்கள் சமரசம் செய்து கலைந்து போக செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை பிரகாஷ், அவரது வீட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், நாகை டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரகாஷின் நண்பர்களான, மருந்து கொத்தளத்தெருவை சேர்ந்த சிவபவித்ரன், ஆனந்த்(27), பேட்டரி சூர்யா(24) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.