லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

 

லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

திருவள்ளூர் மாவட்டம் மேத்தா நகரைச் சேர்ந்த ராஜி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் குன்றத்தூர் – அனகாபுத்தூர் சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி உயிரிழந்து விட்டதாக பூந்தமல்லி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

இந்த நிலையில் ராஜி லாரி மோதி தான் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விபத்து நடப்பதற்கு முன்னர் ராஜி சாலையை கடப்பதற்காக காத்திருந்ததும் அப்போது மெதுவாக வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஆனால் ராஜி தற்கொலை செய்து கொண்டதை அறியாத பொதுமக்கள் லாரி மோதி உயிரிழந்ததாக கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.