குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

 

குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

தேனி

பெரியகுளம் அருகே குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(40). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி மது அருந்தி விட்டு சென்று வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் காளீஸ்வரி கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் தட்சிணாமூர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் பெரியகுளம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.