ஆட்டோவில் போன பெண் -இருட்டில் போன ஆட்டோ ட்ரைவர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 

ஆட்டோவில் போன பெண் -இருட்டில் போன ஆட்டோ ட்ரைவர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஆட்டோவில் வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ ட்ரைவரை போலீசார் கைது செய்தனர்

ஆட்டோவில் போன பெண் -இருட்டில் போன ஆட்டோ ட்ரைவர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில்  45 வயதான பெண் தன்னுடைய கணவரோடு வசித்து வந்தார் .அவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு செங்கல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர் .இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர் ஒருவரின் திருமணம் அங்குள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது ,அந்த  கல்யாணத்திற்கு போவதற்காக அந்த பெண் கடந்த வாரம் இரவு ஒரு ஆட்டோவை புக் செய்தார் .அந்த ஆட்டோ டிரைவரும் அந்த பெண்ணும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் .அதனால் அந்த பெண் அவரை நம்பி அந்த இரவு நேரத்தில் தனியாக அந்த ஆட்டோவில் சென்றார் .

அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு இருட்டான இடத்தில் நிறுத்தியதும் ,இருவரும்  கள் குடித்தனர் .பின்னர் போதை தலைக்கேறியதும்  அந்த ஆட்டோ ட்ரைவர், அந்த பெண்ணை பாலியல்  பலாத்காரம் செய்தார் .பிறகு அவர் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்தார் .பிறகு அந்த பிணத்தை  அங்கேயே விட்டு விட்டு அவர் தப்பியோடி விட்டார் .

மறுநாள்  அந்த பகுதி மக்கள் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஒரு ஆட்டோ டிரைவர் இந்த கொலையை செய்ததை  கண்டுபிடித்தார்கள்

அதன் பிறகு இந்த கொடூரமான குற்றத்திற்காக ஆட்டோரிக்ஷா டிரைவர் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

ஆட்டோவில் போன பெண் -இருட்டில் போன ஆட்டோ ட்ரைவர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்