அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

 

அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் சுமார் 250 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் மற்றும் பண்டிகை காலம் உள்ளிட்ட காரணங்களால், மாநகராட்சி அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சோதனையில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் கடைவீதியில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில், அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

இதில், கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 250 கிலோ மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி அதிகாரிகள், இனிவரும் காலங்களில் வாரம் ஒரு முறை சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.