“ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்” – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

 

“ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்” – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

கடின உழைப்பு இருந்தால் அந்த உழைப்பே ஒருவரை மேலே கொண்டு செல்லும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

“ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்” – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளது . ஆஸ்திரேலியாவில் திடீரென கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக அமைந்தது. இந்திய அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர்.

“ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்” – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

கடின உழைப்பு நிச்சயமாக ஒருவரை உயர்த்தும்.அறிமுக வீரர் என்று கருதாமல் அணியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர்.ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்; பாராட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுத்தது எனக்கு கனவு போலவே இருந்தது. ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலியாவில் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. பிறந்த குழந்தையை பார்ப்பதைவிட நாட்டுக்காக விளையாடியதையே மிகவும் பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

“ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்” – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பங்கேற்று தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.