இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2-வது போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக பின்ச் மற்றும் வார்னர் களமிறங்கினார். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். பின்ச் 60 ரன்களிலும்,வார்னர் 83 ரன்களில் ஆட்டமிழக்க பிறகு வந்த ஸ்மித் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் சதமடித்தார். ஸ்மித் 104 ரன்களில் ஆட்டமிழக்க அதன் பிறகு வந்த லபஸ்சாக்னே மற்றும் மேக்ஸ்வல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது.

Image

390 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அகர்வால் 28 ரன்களிலும், தவான் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு கேப்டன் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தனர். அய்யர் 38 ரன்களில் ஆட்டமிழக்க ராகுல் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். கோலி 89 ரன்களிலும் ராகுல் 76 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 28 ரன்களிலும் ஜடேஜா 24 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர் முடிவில் 329 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த ஒரு நாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது