குடும்ப சண்டையின் கொடூரம் -அண்ணனின் குழந்தையை கொன்ற அத்தைகள்

 

குடும்ப சண்டையின் கொடூரம் -அண்ணனின் குழந்தையை கொன்ற அத்தைகள்

ஒரு குடும்ப சண்டையில் ஒரு குழந்தையை அவரின் அத்தைகளே கொன்ற திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது

குடும்ப சண்டையின் கொடூரம் -அண்ணனின் குழந்தையை கொன்ற அத்தைகள்

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் தனது அண்ணனுடன் அவரின் இரண்டு சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி ஆகியோர் பாசமலர்களாக வளர்ந்து வந்தார்கள் .ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் அண்ணனுக்கு சப்னா என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது .அவருடன் திருமணமானதால் அவர்களின் சகோதரரின் நடவடிக்கை மாறியதால் ,அவர் தன்னுடைய தங்கைகளை வெறுத்தார் ,அதுமட்டுமல்லாமல் தன்னுடைய மனைவியின் முன்பே அவர்களை கேவலப்படுத்தி பேசியுள்ளார் .அதை கேட்டு அவர்களின் அண்ணியும் திட்டியுள்ளார் .
இதனால் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அந்த பிங்கி மற்றும் ரிங்கியும் செப்டம்பர் 29 ஆம் தேதி அவரின் அண்ணனின் குழந்தையை கொலை செய்து விட்டனர் . பின்னர் குழந்தையின் உடலை ஒரு போர்வையில் மூடி, அதை தங்கள் வீட்டிற்குள் ஒரு அலமாரிக்குள் மறைத்து வைத்ததாக மத்திய நொய்டாவின் துணை போலீஸ் கமிஷனர் ஹரிஷ் சந்தர் தெரிவித்தார். பின்னர் குழந்தையை காணவில்லை என்று அவரின் தாயார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர் .அப்போது அந்த குழந்தையை அவர்கள் அத்தைகளே கொன்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது .அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குழந்தையின் அத்தைகள் பிங்கி மற்றும் ரிக்கி ஆகியோரை கைது செய்தார்கள் .

குடும்ப சண்டையின் கொடூரம் -அண்ணனின் குழந்தையை கொன்ற அத்தைகள்