காதலனோடு உல்லாசமா இருக்கனும் -அதுக்காக ஒரு குழந்தையை கடத்தணும் -ஒரு காதலி போட்ட பிளான்.

 

காதலனோடு உல்லாசமா இருக்கனும் -அதுக்காக ஒரு குழந்தையை கடத்தணும் -ஒரு காதலி போட்ட பிளான்.


தனது காதலனோடு உல்லாசமாக இருக்க விரும்பிய ஒரு காதலி, அவரின் உறவுக்காரரின் குழந்தையை கடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

காதலனோடு உல்லாசமா இருக்கனும் -அதுக்காக ஒரு குழந்தையை கடத்தணும் -ஒரு காதலி போட்ட பிளான்.


பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் வசிக்கும் 20 வயது பெண் நிஷு திவேதி என்பவர் அதே பகுதியில் வசிக்கும் நவ்தீப் சிங் என்ற வாலிபரை காதலித்து வந்தார் .இருவரின் காதலுக்கு இருவரின் குடும்பத்திலும் பலத்த எதிர்ப்பு நிலவியது .அதனால் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தார்கள் . அவர்களின் ரகசிய சந்திப்பையும் அவரின் குடும்பத்தினர் கண்டு பிடித்து விட்டார்கள் .அதனால் இருவரும் ஒன்றாக ஹோட்டலில் தங்கி உல்லாசமாக இருக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டார்கள் .
அந்த திட்டப்படி அந்த பெண் நிஷு திவேதியின் உறவினரின் மூன்று வயதான குழந்தையை கடத்தி, அது தங்களின் குழந்தையென்று கூறினால் அந்த ஹோட்டல் உரிமையாளர் தங்களை கணவன் மனைவி என்று நம்பி ரூம் கொடுப்பார் என்று நினைத்து திட்டத்தை செயல்படுத்த முனைந்தார்கள் .
அதன் படி அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த மூன்று வயதான குழந்தையை கடத்தி பஞ்சாபின் ஜலந்தரில் வசித்து வந்த தனது காதலன் நவ்தீப் சிங்கிடம் சென்றார்.பின்னர் இருவரும் அந்த குழந்தையோடு ஒரு ஹோட்டலில் தங்களை கணவன் மனைவி என்றும், இது தங்களின் குழந்தையென்றும் கூறி ரூம் போட சென்றார்கள் .
இதற்கிடையே காணாமல் போன குழத்தையின் பெற்றோர் தங்களின் குழந்தையை காணவில்லை என்று கூறி போலீசில் புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினர் .அப்போது அந்த குழந்தையின் அத்தை நிஷு குழந்தையை கடத்தியதை கண்டறிந்து அவரை கைது செய்தனர் .போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் .

காதலனோடு உல்லாசமா இருக்கனும் -அதுக்காக ஒரு குழந்தையை கடத்தணும் -ஒரு காதலி போட்ட பிளான்.