2 ஊழியர்களுக்கு கொரோனா – ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்!

 

2 ஊழியர்களுக்கு கொரோனா – ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்!

சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுலக பணியாளர்கள 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து, அலுவலகம் மூடப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையம் எதிரே வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

2 ஊழியர்களுக்கு கொரோனா – ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்!

அதில் அந்த ஊழியருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதில், மேலும் ஒரு ஊழியருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து, இருவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது. அத்துடன், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.