ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – தப்பியோடிய மர்மநபருக்கு போலீஸ் வலை

 

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – தப்பியோடிய மர்மநபருக்கு போலீஸ் வலை

தேனி

ஆண்டிப்பட்டி அருகே அதிகாலையில் வங்கி ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள ஜக்கம்பட்டியில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் ஹெல்மட் அணிந்தவாறு நுழைந்த மர்மநபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் இயந்திரங்களை உடைக்க முடியாத சூழலில், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – தப்பியோடிய மர்மநபருக்கு போலீஸ் வலை

இந்த கொள்ளை முயற்சியில் அங்கிருந்த 2 ஏடிஎம் இயந்திரங்கள் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து, காலையில் பணம் எடுக்க வந்தவர்கள் ஏடிஎம் இயந்திரம் சேதமடைந்திருப்பது குறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி கொள்ளையனை தேடி வருகின்றனர். அதிகாலையில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.