பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி – இருவர் கைது

 

பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி – இருவர் கைது

கோவை

பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 நபர்களை போலீசார் கைதுசெய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கோவிந்தனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கடையை திறப்பதற்காக சென்றபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், உள்ளே சென்று பார்த்தபோது கடையில் எதுவும் திருடுபோகாதது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் வடக்கிப்பாளையம் காவல் நிலயத்தில் புகார் அளித்தார்.

பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி – இருவர் கைது

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து, உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொள்ளையர்கள் தப்பியோடாமல் இருக்க வடக்கிப்பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இதனால், அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் கோவிந்தனூரை சேர்ந்த கருப்பசாமி(26), விவேக்(26) என்பதும், இருவரும் டாஸ்மாக் கடையில் கொள்ளையில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.