கல்லூரி முன்பு மாணவிக்கு தாலி கட்ட முயற்சி… இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…

 

கல்லூரி முன்பு மாணவிக்கு தாலி கட்ட முயற்சி… இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…

நாமக்கல்

நாமக்கல்லில் கல்லூரி முன்பு மாணவிக்கு தாலிகட்ட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள மின்னத்தம்பட்டியை சேர்ந்தவர் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(29). இவர் கோவையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் பெற்றோர் கல்லூரி மாணவியை பெண் கேட்டு சென்றுள்ளனர். அதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் இருவரும் போனில் தொடர்ந்து பேசி, பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் ஜாதக பொருத்தம் சரி இல்லாததாக கூறி பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி முன்பு மாணவிக்கு தாலி கட்ட முயற்சி… இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…

இதனால் பாலகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மாணவி பேருந்து மூலம் நாமக்கல்லில் உள்ள கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பாலகிருஷ்ணன், கல்லூரி வாயிலின் அருகே வழிமறித்து மாணவிக்கு தாலி கட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டபடி தப்பியோடினார். இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாவர்கள் இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த நாமக்கல் நகர போலீசார், இளைஞரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் அவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், தாலி கட்டுவதற்கு பெண் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்று தான் கருதியதாவும் கூறினார்.