2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; போலீசார் வலைவீச்சு!

 

2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; போலீசார் வலைவீச்சு!

ஜபால்பூர் அருகே 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் வசித்து வரும் தாய் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனை அறிந்த 2 பேர், அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது, அந்த குழந்தை அழத் தொடங்கிய சத்தத்தை கேட்டு பதற்றம் அடைந்த தாய் வீட்டுக்குள்ளே சென்று பார்த்துள்ளார்.

2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; போலீசார் வலைவீச்சு!

அவர் வருவதை அறிந்த 2 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனை பற்றி குழந்தையின் தாய், அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில், 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.