துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

 

துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி:  அதிர்ச்சியில் தொண்டர்கள்!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வந்தார். தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் துரைமுருகனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு 2டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்ட நிலையில் துரைமுருகனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் சென்னை கோட்டூர்புரம் உள்ள வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி:  அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அத்துடன் துரைமுருகன் மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி:  அதிர்ச்சியில் தொண்டர்கள்!

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. துரைமுருகனின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.