தஞ்சை கோயிலில் கொள்ளை முயற்சி- இருவரை பிடித்து தூணில் கட்டிவைத்த கிராமமக்கள்

 

தஞ்சை கோயிலில் கொள்ளை முயற்சி- இருவரை பிடித்து தூணில் கட்டிவைத்த கிராமமக்கள்

தஞ்சாவூர்

தஞ்சை அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தூணில் கட்டிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் அடுத்த வயலூர் அருகேயுள்ள ராமாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முன்பாக நேற்று இரவு 2 இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான விதமாக நீண்ட நேரமாக சுற்றித் திரிந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கிராமவாசிகள் சிலர் ‘திருடன்…திருடன் ’என சத்தமிட்டுள்ளனர். சத்தத்தை கேட்டு கிராம மக்கள் திரண்டதால் அதிர்ச்சியடைந்த மர்மநபர்கள் தப்பியோடி முயற்சித்தனர்.

தஞ்சை கோயிலில் கொள்ளை முயற்சி- இருவரை பிடித்து தூணில் கட்டிவைத்த கிராமமக்கள்

ஆனால், இருவரையும் துரத்திச்சென்ற பிடித்த கிராம மக்கள், அவர்களை கோயில் தூணில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து, தஞ்சை தாலுகா காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு சென்ற போலீஸாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் திருவையாறு அடுத்த உமையவள் ஆற்காடு கிராமத்தை சேர்ந்த ஜெகன்னாதன்(18) மற்றும் ஆனந்தபாபு (22) என்பது தெரியவந்தது. மேலும், கடப்பாரையை கொண்டு கோயில் உண்டியலை உடைத்து திருட சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, கிராமவாசிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.