தனியார் வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி – ஒருவர் கைது

 

தனியார் வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற  முயற்சி – ஒருவர் கைது

கோவை

கோவை அருகே தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற நபரை போலீசார் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(34). இவர் நேற்று பொள்ளாச்சியில் உள்ள தனியார் வங்கி கிளையில் 2 லட்சம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய முயன்றார். அப்போது, அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை, பணம் எண்ணும் எந்திரத்தில் வைத்து வங்கி காசாளர் எண்ணினார்.

தனியார் வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற  முயற்சி – ஒருவர் கைது

அப்போது, சில நோட்டுகள் மீது சந்தேகம் எழுந்ததால், உடனடியாக வங்கி மேலாளர் குமரேசனுக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து, வங்கி மேலாளர் முன்னிலையில் பணத்தை மீண்டும் எண்ணிய போது, அதில் 14 ஆயிரம் மதிப்பிலான 28 கள்ளநோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வங்கி மேலாளர் குமரேசன், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயகுமாரை கைதுசெய்தனர். மேலும், அவரிடம் இருந்த கள்ளநோட்டுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.