ஈரோட்டில் விசிக நிர்வாகி கார் மீது தாக்குதல்… மாவட்ட எஸ்.பி-யிடம் புகார்!

 

ஈரோட்டில் விசிக நிர்வாகி கார் மீது தாக்குதல்… மாவட்ட எஸ்.பி-யிடம் புகார்!

ஈரோடு

ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கார் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யக்கோரி மாவட்ட எஸ்.பி சசிமோகனிடம் புகார் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் தலைவராக உள்ளவர் மதிவாணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே சென்றபோது, மர்மநபர்கள் சிலர் இவரது கார் மீது தாக்குதல் நடத்தி விட்டு, தப்பியோடினர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவிலலை என கூறப்படுகிறது.

ஈரோட்டில் விசிக நிர்வாகி கார் மீது தாக்குதல்… மாவட்ட எஸ்.பி-யிடம் புகார்!

இந்த நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யக் கோரி ஈரோடு மாவட்ட எஸ்.பி சசிமோகனிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறியாளர் அணி துணை செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் பல்வேறு அமைப்பினரும் மனு அளித்தனர். அவருடன் ஆதிதமிழர் பேரவை, தமிழ்புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

தொடர்ந்து, எஸ்.பி., அலுவலகம் முன்பு மதிவாணன் காரை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கஙகளை எழுப்பினர். இதில், நிலஉரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட துணை அமைப்பாளர் செந்தமிழ் வளவன், தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.