‘மது விற்பனையாளர் மீது கொலைவெறி தாக்குதல்’ திருட்டை தடுக்க முயன்றதால் நேர்ந்த சோகம்!

 

‘மது விற்பனையாளர் மீது கொலைவெறி தாக்குதல்’ திருட்டை தடுக்க முயன்றதால் நேர்ந்த சோகம்!

அலங்காநல்லூர் அருகே மதுக்கடையில் பணத்தை திருட விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் அருகே இருக்கும் கொண்டையம்பட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று வழக்கம் போல ஊழியர்கள் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த புதுபட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் மதுபோதையில், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த விற்பனையாளர் சண்முகவேல், அவர்களை தடுக்க முற்பட்டதால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

‘மது விற்பனையாளர் மீது கொலைவெறி தாக்குதல்’ திருட்டை தடுக்க முயன்றதால் நேர்ந்த சோகம்!

அப்போது, சண்முகவேலை மதுபாட்டிலால் தலையில் அடித்த அந்த நபர்கள் கல்லா பெட்டியில் இருந்து ரூ,7,000 பணத்தை திருடிக் கொண்டு சென்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சண்முகவேலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில், புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் சண்முகவேலை தாக்கியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

‘மது விற்பனையாளர் மீது கொலைவெறி தாக்குதல்’ திருட்டை தடுக்க முயன்றதால் நேர்ந்த சோகம்!

கடந்த மாதம் வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் தாக்குதல் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.