பாஜக பிரமுகர் மீது தாக்குதல் – வி.சி.க-வினர் கைது

 

பாஜக பிரமுகர் மீது தாக்குதல் – வி.சி.க-வினர் கைது

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பாஜக பிரமுகர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது. திருமாவளவன் மீது அவதூறாக பேசி வரும் பாஜகவினரை கைதுசெய்ய வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று விடுதலை
சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

பாஜக பிரமுகர் மீது தாக்குதல் – வி.சி.க-வினர் கைது


அப்போது, ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வந்த பாஜக பிரமுகரின் காரை மறித்த, அவர்கள் அந்த நபரை கடுமையாக தாக்கி விரட்டி அடித்தனர். இதனால்
போலீசாருக்கும், விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் உள்பட
100-க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

பாஜக பிரமுகர் மீது தாக்குதல் – வி.சி.க-வினர் கைது