அன்னூரில் தனியார் வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி!

 

அன்னூரில் தனியார் வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி!

கோவை

கோவை அருகே தனியார் வங்க ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூரில் பிரபல தனியார் வங்கியின் கிளையும், அருகிலேயே ஏ.டி.எம் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் வந்த மர்மநபர் ஒருவர், கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தினார்.

பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடன முயன்றார். ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. இதில் ஏமாற்றம் அடைந்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அன்னூரில் தனியார் வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி!

இந்த நிலையில், இன்று காலை பணம் எடுக்க சென்றவர்கள் ஏடிஎம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களுடன் சென்று கொள்ளையனின் கைரேகை பதிவுகளை சேகரித்து, விசாரணை மேற்கொண்டனர்.

ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 3 மணியளவில் மர்மநபர் ஒருவர் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவின் அடிப்படையில் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.