சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம்?
Jun 16, 2020, 22:07 IST1592325465000
இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே நடைபெற்ற மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி என்பவர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். இதில், தெலங்கானாவின் சூர்யபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பாபு என்ற ராணுவ கமெண்டோ அதிகாரியும் உயிரிழந்ததாகவும், லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் சண்டையிட்டதில் சீனா தரப்பில் 5 பேரும் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் அறிவித்தது.
இந்நிலையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி 20 இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.