ஈரோடு -உரக்கடை அதிபர் வீட்டில், விடிய விடிய வருமான வரி சோதனை-ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்
Sep 1, 2020, 11:30 IST1598940010000
ஈரோடு மாவட்டம் கோபியில் உரக்கடை அதிபர் வீட்டில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை
கோபி கச்சேரிமேட்டில் ராயல் பெர்ட்டிலைசர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவன உரிமையாளர் சோமசுந்தரம் என்பவரது வீடு நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ளது. நேற்று இரவு கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து 10 க்கும் மேற்பட்ட
வருமானவரித்துறை அதிகாரிகள் காலை வரை சோதனை நடத்தினர்.
உரக்கடை அதிபர் வீட்டில், விடிய விடிய வருமான வரி சோதனை-ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்#IncomeTax #Erode #fertilizercompany pic.twitter.com/Ke4pv6qfg8
— Top Tamil News (@toptamilnews) September 1, 2020
சோதனையின் முடிவில் கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.