உதகை வாக்குச்சாவடி மையங்களில், ஆட்சியர் நேரில் ஆய்வு!

 

உதகை வாக்குச்சாவடி மையங்களில், ஆட்சியர் நேரில் ஆய்வு!

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையங்களை, ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா நேரில் ஆய்வுசெய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலகொலா தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசெண்ட் திவ்யா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உதகை வாக்குச்சாவடி மையங்களில், ஆட்சியர் நேரில் ஆய்வு!

தொடர்ந்து, கன்னேரி மந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திலும் அவர் ஆய்வுசெய்தார்.இந்த ஆய்வின்போது, வாக்குச்சாடிகளில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, உதகை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.