சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழப்பு!

 

சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழப்பு!

23பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 51,699பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேரும், கேஎம்சியில் 3 பேர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2 பேர்
என மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளனர்.