பேருந்து பழுதானதால் சாலையோரம் தூங்கிய பயணிகள் மீது டிரக் மோதி 18 பேர் மரணம்

 

பேருந்து பழுதானதால் சாலையோரம் தூங்கிய பயணிகள் மீது டிரக் மோதி 18 பேர் மரணம்

பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் உத்தரபிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தனர். பரபன்கி மாவட்டத்தில் லக்னோ – அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீரென பேருந்து பழுதானதால், பேருந்து சாலையின் ஓரமாக நிறுத்தபட்டது.

பேருந்து பழுதானதால் சாலையோரம் தூங்கிய பயணிகள் மீது டிரக் மோதி 18 பேர் மரணம்
u

நள்ளிரவு என்பதால் இந்த நேரத்தில் தூங்கிவிட்டு காலையில் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து, சாலையோர நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் முன்பாக வரிசையாக படுத்து தூங்கினர்.

அதிகாலை 1.30 மணியளவில் மின்னல் வேகத்தில் வந்த டிரக் ஒன்று பேருந்தின் பின்னால் வந்து மோதியிருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் முன்னால் படுத்திருந்து தூங்கியவர்களில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.