“என் கூடவே என் அக்காவையும் கல்யாணம் பண்ணிக்கிறியா” -மணப்பெண் ஆசையால் மணமேடையில் நடந்த அதிர்ச்சி.

 

“என் கூடவே என் அக்காவையும் கல்யாணம் பண்ணிக்கிறியா” -மணப்பெண் ஆசையால் மணமேடையில் நடந்த அதிர்ச்சி.

ஒரு மணப்பெண் தன்னுடைய அக்காவையும் தன்னுடைய மணமகனுக்கு கல்யாணம் செய்து வைத்ததால் அந்த மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்

“என் கூடவே என் அக்காவையும் கல்யாணம் பண்ணிக்கிறியா” -மணப்பெண் ஆசையால் மணமேடையில் நடந்த அதிர்ச்சி.


கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தில் வசிக்கும் 30 வயதான உமாபதி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு 20 வயதான சுப்ரியா என்ற மூத்த சகோதரி இருக்கிறார்
அந்த சுப்ரியாவுக்கு வாய் பேச முடியாத நிலை இருந்தது .இந்த மாற்று திறனாளியான சுப்ரியாவை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் தன்னை கல்யாணம் செய்து கொள்ளவிருக்கும் உமாபதியிடம் அந்த பெண் தன்னோடு சேர்த்து , தன்னுடைய அக்காவையும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டு உள்ளார்.
அதை கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த உமாபதி ,பிறகு அதற்கு சம்மதம் தெரிவித்தார் .அதனால் நேற்று முன்தினம் ஒரே மேடையில் 2 பேரையும் திருமணம் செய்து கொண்டார் . இந்த திருமணம் சமூக ஊடகத்தில் வைரலானது
இதற்கிடையே அந்த சகோதரிகளை ஒருவரே திருமணம் செய்து கொண்ட விஷயம் அந்த பகுதி போலீசுக்கு தெரியவந்தது .அப்போது போலீசார் அந்த மணமகள் சுப்ரியா 17 வயது மைனர் என்பதை கண்டறிந்தனர் .பின்னர் மைனர் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதால் அந்த மாப்பிள்ளை உமாபதி மற்றும் அவரின் உறவினர்களை கைது செய்தனர் .மேலும் சிலரை தேடி வருகின்றனர் .

“என் கூடவே என் அக்காவையும் கல்யாணம் பண்ணிக்கிறியா” -மணப்பெண் ஆசையால் மணமேடையில் நடந்த அதிர்ச்சி.