திருப்பூர் அருகே கொரோனா பாதிப்பால் உதவி ஆய்வாளர், மகன் பலி!

 

திருப்பூர் அருகே கொரோனா பாதிப்பால் உதவி ஆய்வாளர், மகன் பலி!

திருப்பூர்

கொரோனா பாதிப்பால் ஊத்துக்குளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் கோபாலன் (55). இவரது மகன் சரவணன் (24). இவருக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன், கடந்த 27ஆம் தேதி உயிரிழந்தார்.

திருப்பூர் அருகே கொரோனா பாதிப்பால் உதவி ஆய்வாளர், மகன் பலி!

இந்த நிலையில், உதவி ஆய்வாளர் போபாலனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உதவி ஆய்வாளர் கோபாலன் நேற்று உயிரிழந்தார். கொரோனாவால் மகன், தந்தை என அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஊத்துக்குளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.