சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி… நெல்லை மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை…

 

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி… நெல்லை மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை…

நெல்லை

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, நேற்று நெல்லை மாவட்டத்திற்கு மத்திய துணை பாதுகாப்பு படையினர் வந்தடைந்தனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு பணிக்காக, மத்திய துணை பாதுகாப்பு படையினர் சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி… நெல்லை மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை…

அதன்படி, நெல்லை மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 406-வது பட்டாலியனை சேர்ந்த உதவி தளவாய் நரேந்திரன் தலைமையில் 84 துணை பாதுகாப்பு படையினர் நேற்று வந்தடைந்தனர். அவர்களுக்கு நெல்லை மாவட்ட காவல் துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் சுடலைமுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மேலும், அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டு, ஆயுதப்படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து, இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி., மணிவண்ணனை நேரில் சந்தித்து ஆலோசனை பெறும் துணை பாதுகாப்பு படையினர், பின்னர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.