பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்… இளைஞர் சொன்ன காரணத்தால் கடுப்பான போலீசார்!

 

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்… இளைஞர் சொன்ன காரணத்தால் கடுப்பான போலீசார்!

சிறைக்கு செல்ல வேண்டும் என்பதால் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், பேசிய இளைஞர் தான் பிரதமர் மோடியை கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அந்த எண்ணை ட்ரேஸ் செய்து, அழைப்பு விடுத்த நபர் யார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். கஜூரி ஹாஸ் பகுதியை சேர்ந்த அர்மான் என்ற இளைஞர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்… இளைஞர் சொன்ன காரணத்தால் கடுப்பான போலீசார்!

அப்போது, தனது தந்தை திட்டிக் கொண்டே இருப்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் வீட்டில் இருப்பதை விட சிறையில் இருப்பதே நல்லது என்று தான் நினைத்ததால் இதை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இளைஞர் சொன்ன காரணத்தை கேட்டு கடுப்பான போலீசார் அவரை காவல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்… இளைஞர் சொன்ன காரணத்தால் கடுப்பான போலீசார்!

எனினும், கட்டுப்பாட்டு அறைக்கு அந்த இளைஞர் அழைப்பு விடுத்த போது அவர் போதையில் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், இதன் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இளைஞர் அர்மான் ஏற்கனவே கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு தான் விடுதலையானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.