ரஜினிகாந்த் சார்தான் எங்களுக்கு சம்பளத்தை தரவேண்டும் – ஆஷ்ரம் பள்ளி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ரஜினிகாந்த் சார்தான் எங்களுக்கு சம்பளத்தை தரவேண்டும் – ஆஷ்ரம் பள்ளி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஷ்ரம் பள்ளியை நடத்திவருகிறார். இந்த பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் என்று 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்றும், ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரைக்கும் நிர்வாகம் தராமல் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ரஜினிகாந்த் சார்தான் எங்களுக்கு சம்பளத்தை தரவேண்டும் – ஆஷ்ரம் பள்ளி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இதை அடுத்து பள்ளியின் நிர்வாக செயல்பாட்டைக் கண்டித்து இன்று ஊழியர்கள் பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், கொரோனா காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியம் வழங்காமல் பள்ளி நிர்வாகம் தங்களை வஞ்சிக்கிறது என்று பலரும் குற்றம்சாட்டினர்.

ரஜினிகாந்த் சார்தான் எங்களுக்கு சம்பளத்தை தரவேண்டும் – ஆஷ்ரம் பள்ளி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதியம் ஏன் தரவில்லை என்று கேட்டால் தருகிறோம் என்று சொல்லி தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர். நாங்கள் படும் சிரமத்தை நினைத்து பார்த்து ரஜினிகாந்த் சார் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்தாவது எங்களுக்கு ஊதியத்தை தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.