மோடியும், மம்தாவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.. இரண்டு பேருக்கும் வித்தியாசம் கிடையாது.. ஓவைசி தாக்கு

 

மோடியும், மம்தாவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.. இரண்டு பேருக்கும் வித்தியாசம் கிடையாது.. ஓவைசி தாக்கு

மோடியும், மம்தாவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள், அவர்கள் இரண்டு பேருக்கும் வித்தியாசம் கிடையாது என அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி அதிரடி கருத்துக்களுக்கு பெயர் போனவர். முஸ்லிம் சமுதாயத்தில் புதிய எழுச்சி நாயகனாக உருவெடுத்துள்ளார். நாடு முழுவதும் அசாதுதீன் ஓவைசிக்கு ஆதரவு பெருகிறது. மக்களின் ஆதரவை பயன்படுத்தி அசாதுதீன் ஓவைசி தனது கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் விரிவுப்படுத்தி வருகிறார்.

மோடியும், மம்தாவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.. இரண்டு பேருக்கும் வித்தியாசம் கிடையாது.. ஓவைசி தாக்கு
மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி

தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலிலும் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிடுகிறது. அங்கு அசன்சோலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: மம்தா பானர்ஜிக்கும், நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

மோடியும், மம்தாவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.. இரண்டு பேருக்கும் வித்தியாசம் கிடையாது.. ஓவைசி தாக்கு
திரிணாமுல் காங்கிரஸ்

அவர்கள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அவர்கள் சகோதரன், சகோதரி. தங்களது அறிக்கைகளின் வாயிலாக மக்களை முட்டாளாக்குகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு என்ன செய்தார்கள் என்று பட்டியலிடும்படி நான் திரிணாமுல் காங்கிரசுக்கு சவால் விடுக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.