என்னை பணத்தால் வாங்கும் மனிதர் ஒருபோதும் பிறக்கவில்லை.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி

 

என்னை பணத்தால் வாங்கும் மனிதர் ஒருபோதும் பிறக்கவில்லை.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி

என்னை பணத்தால் வாங்கும் மனிதர் ஒருபோதும் பிறக்கவில்லை என்று மம்தா பானர்ஜிக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில், மாநிலத்தில் வகுப்புவாத பிரிவை கூர்மைப்படுத்துவதற்கும், இந்து-முஸ்ஸிம் வாக்குகளை தங்களுக்குள் பிரிப்பதற்கும் ஹைதராபத்திலிருந்து ஒரு கட்சியை (அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்.) பா.ஜ.க. பிடித்துள்ளது மற்றும் சிறுபான்மை வாக்குகளை பிரிக்க பல கோடி ரூபாய் செலவிடுகிறது. என்று குற்றம் சாட்டினார். அதாவது அசாதுதீன் ஓவைசிக்கு பா.ஜ.க. பல கோடி ரூபாய் கொடுத்து மேற்கு வங்கத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். களம் இறக்குகிறது என்று மம்தா மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

என்னை பணத்தால் வாங்கும் மனிதர் ஒருபோதும் பிறக்கவில்லை.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி
மம்தா பானர்ஜி

மம்தாவின் குற்றச்சாட்டுக்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: அசாதுதீன் ஓவைசியை பணத்தால் வாங்க முடிந்த மனிதர் ஒருபோதும் பிறக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பலர் பா.ஜ.க.வுக்கு செல்வதால் முதல்வர் (மம்தா பானர்ஜி) தனது சொந்த கட்சி குறித்து கவலைப்படவேண்டும்.

என்னை பணத்தால் வாங்கும் மனிதர் ஒருபோதும் பிறக்கவில்லை.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசி
பா.ஜ.க.

எனது கட்சிக்கு வாக்களித்த பீகார் மக்களையும் மம்தா பானர்ஜி அவமதித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் மெகா கூட்டணி பல இடங்களில் தோல்வி அடைய அசாதுதீன் ஓவைசி கட்சியும் ஒரு காரணம் கூறப்பட்டது. பா.ஜ.க.வின் பி டீம் ஏ.ஐ.எம்.ஐ.எம். என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.