ஆம் ஆத்மி எம்.எல்,ஏ. அலுவலகம் தாக்குதல்… கோழைத்தனமாக தாக்குதல்களுக்கு பயப்பட மாட்டோம்.. கெஜ்ரிவால்

 

ஆம் ஆத்மி எம்.எல்,ஏ. அலுவலகம் தாக்குதல்… கோழைத்தனமாக தாக்குதல்களுக்கு பயப்பட மாட்டோம்.. கெஜ்ரிவால்

டெல்லியில் குடிநீர் வாரிய தலைமை அலுவலம் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அலுவலகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்தார்.

டெல்லியில் ஜான்டேவன் பகுதியில் டெல்லி குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று 100க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அந்த அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தை சேதப்படுத்தினர். மேலும் குடிநீர் வாரியத்தின் துணை தலைவர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராகவ் சதாவின் அலுவலகத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். குடிநீர் வாரிய அலுவலக ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலை பா.ஜ.க.தான் நடத்தியதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

ஆம் ஆத்மி எம்.எல்,ஏ. அலுவலகம் தாக்குதல்… கோழைத்தனமாக தாக்குதல்களுக்கு பயப்பட மாட்டோம்.. கெஜ்ரிவால்
தாக்குதல் நடந்த அலுவலகம்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், டெல்லி குடிநீர் வாரியத்தின் துணை தலைவருமான ராகவ் சதா இது குறித்து கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை எச்சரிக்க பா.ஜ.க. குண்டர்கள் டி.ஜே.பி. அலுவலகததை தாக்கினர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதை அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்த வேண்டும், இல்லையென்றால் உங்களது தலைவர்களின் அலுவலகங்களை தொடர்ந்து தாக்குவோம் என்று அவர்கள் கூறினர் என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி எம்.எல்,ஏ. அலுவலகம் தாக்குதல்… கோழைத்தனமாக தாக்குதல்களுக்கு பயப்பட மாட்டோம்.. கெஜ்ரிவால்
ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆம் ஆத்மியும் எனது அரசும் கடைசி மூச்சு வரை விவசாயிகளுடன் இருக்கும் என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பா.ஜ.க.வின் இத்தகைய தாக்குதல்களால் கோபப்பட வேண்டாம் என்று அனைத்த தொண்டர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதியாக இருங்கள், விவசாயிகளுக்கு ஆதரவளி அளியுங்கள் என்று பதிவு செய்து இருந்தார்.