மனைவிக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

 

மனைவிக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை வீரியமாக இருப்பதால் ஏராளமான திரைப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தொற்றின் பிடியில் சிக்கி வருகின்றனர். இச்சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மனைவிக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

அவருடன் தொடர்பில் இருந்ததால் கெஜ்ரிவாலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். நிர்வாகப் பணிகளை துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. கெஜ்ரிவால் தன் கைவசம் எந்த இலாகவையும் வைத்திருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மனைவிக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

கடந்த வருடமே லேசான தொண்டை வலி ஏற்பட்டதால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் கெஜ்ரிவால். அதற்குப் பின் அவருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 25,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி இரண்டாமிடத்தில் உள்ளது. முதல் மாநிலமாக மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது.