ஆருத்ரா தரிசனம்- சந்தனக் காப்பின்றி காட்சி அளிக்க உள்ள பச்சை மரகத கல் நடராஜர் !

 

ஆருத்ரா தரிசனம்- சந்தனக் காப்பின்றி காட்சி அளிக்க உள்ள பச்சை மரகத கல் நடராஜர் !

சிவபக்தர்கள் ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆருத்ரா விழா. மார்கழி மாதத்தில் சிவனுக்கு உகந்த நோன்பு திருவிழாவாகும். இந்த நாட்களில் சிவனின் நாட்டிய கோல தரிசனத்தை காண்பது பூர்வ ஜென்மம் புண்ணியமாகும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா விழா நாளை நடைபெற உள்ளது. சிதம்பரம் உள்பட சிவாலயங்கள் விழாகோலம் பூண்டுள்ளன. அந்த வகையில், ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில், பச்சை மரகத கல்லினால் ஆன நடராஜர், சந்தனப் பூச்சின்றி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

ஆருத்ரா தரிசனம்- சந்தனக் காப்பின்றி காட்சி அளிக்க உள்ள பச்சை மரகத கல் நடராஜர் !

இந்த கோயிலில், மூலவரான மங்களநாதசுவாமியாகிய சிவலிங்கம் சுயம்புவால் ஆனதாகும். இங்குதான் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத கல்லினால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆளுயரத்தில், நடனம் ஆடும் திருக்கோலத்தில், விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை இது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி,ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. இதன் காரணமாகத்தான் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்லப்படுகிறது. அதனால் மரகத சிலையைச் சுற்றி எப்போதும் சந்தனப்பூச்சு கலவை பதித்து வைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப்பூச்சு கலைக்கப்படும். மீண்டும் அன்று இரவே சந்தனம் பூசப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. எனவே அந்த நேரத்தில் மட்டும் சந்த காப்பு இல்லாமல் இறைவன் பூச்சு கலைக்கப்பட்டு தரிசனம் தருகிறார்.

ஆருத்ரா தரிசனம்- சந்தனக் காப்பின்றி காட்சி அளிக்க உள்ள பச்சை மரகத கல் நடராஜர் !

ஆருத்ரா அன்று காலையில் பச்சைமரகதக்கல் நடராஜருக்குச் சந்தனப்பூச்சு கலைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சிறப்பு வழிபாடுகள், தீபா ஆராதனைகள் நடைபெறும். அன்று ஒரு நாள் பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக பச்சை மரகத மேனியுடன் அருள்மிகு நடராஜர் காட்சியளிப்பார். அந்த நேரத்தில் சன்னதியில் மேளதாளங்கள் இசைப்பது நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆருத்ரா தரிசனம்- சந்தனக் காப்பின்றி காட்சி அளிக்க உள்ள பச்சை மரகத கல் நடராஜர் !

அதனைத் தொடர்ந்து நாளை பகலில் ஆருத்ரா தரிசனம் முடிவுபெற்று, நாளை இரவு மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்த பின்னர் நடராஜருக்கு மீண்டும் சந்தனக்கலவை பூசப்படும். இதன் பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டுதான் சந்தனக்காப்பு கலைப்படும். இந்த காட்சியைக் காண இதற்கான வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த கோயில், ராமநாதபுரத்திலிருந்து தென்மேற்கே 10 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.