“13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்களை கைது செய்க” வைகோ வேண்டுகோள்!

 

“13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்களை கைது செய்க”  வைகோ வேண்டுகோள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் தீவிர காயம் அடைந்த 4 பேருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக ஆட்சி அமைந்த பிறகு, கோரிக்கை ஏற்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று மதுரையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் தீவிர காயம் அடைந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

“13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்களை கைது செய்க”  வைகோ வேண்டுகோள்!

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டை உலுக்கிய அந்த நிகழ்வு நடந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆம்; நாளை மே 22. 2018 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், தூத்துக்குடியில் 13 அப்பாவித் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்கள் செய்த தவறு என்ன? தூத்துக்குடி சுற்றுச்சூழலைக் கெடுக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அறவழியில் அணிவகுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றதுதான். வழியில் அவர்களை மறித்த காவல்துறையினர், பொதுமக்களை நோக்கிச் சுட்டனர். ஜான்சி, ஸ்நோலின் என்ற இரு பெண்கள் உட்பட, 13 பேர் உயிரிழந்தனர்.அவர்களைச் சுட்டுக்கொன்ற அந்தக் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

“13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்களை கைது செய்க”  வைகோ வேண்டுகோள்!

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற அப்பாவி வணிகர்களை அடித்துக் கொன்ற காவல்துறையினர் மீது, கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என நான் அறிக்கை விடுத்தேன். அதன்படியே, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். வழக்கு நடைபெறுகின்றது. அதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்காக, 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீதும், கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.