“வரம்பு மீறுகிறார் திமுக எம்எல்ஏ ” நடிகை குஷ்பு ஆவேசம்!!

 

“வரம்பு மீறுகிறார் திமுக எம்எல்ஏ ” நடிகை குஷ்பு ஆவேசம்!!

திமுகவினரை கைது செய்யக்கோரி நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

“வரம்பு மீறுகிறார் திமுக எம்எல்ஏ ” நடிகை குஷ்பு ஆவேசம்!!

ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து தான் அளித்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுகவினர் வன்முறையை தூண்டி வருகிறார்கள். எனக்கு தமிழ் மண் மீது உரிமையில்லை என்று யாரும் கூறமுடியாது. நான் 35 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன். தமிழர்களுக்கு இருப்பதால் எனக்கும் இங்கு உரிமை உள்ளது” என்றார்.

“வரம்பு மீறுகிறார் திமுக எம்எல்ஏ ” நடிகை குஷ்பு ஆவேசம்!!

இதைத்தொடர்ந்து பேசிய பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் , “கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியில் தேசிய வாக்காளர் பேரவையினர் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த திமுகவினர் அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கான வீடியோவுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்தும் போலீசார் அவர்களை ஏன் கைது செய்யவில்லை. வன்முறையை திமுகவினர் தூண்டி வருகின்றனர். பொதுமக்கள் பயத்தில் உள்ளனர்.
துறைமுகம் தொகுதியில் திமுகவினர் பிரச்னை செய்கிறார்கள்; சேகர்பாபு வன்முறையை கையாளுகிறார்” என்றார்.