வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு… புதுமாப்பிள்ளையை தீ வைத்து எரித்த கள்ளக்காதலி!

 

வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு… புதுமாப்பிள்ளையை தீ வைத்து எரித்த கள்ளக்காதலி!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கார் ஓட்டுநரை, கள்ளக்காதலி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த காயாம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் சதீஷ்(26) கார் ஓட்டுநர். அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராதா (32). இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், 12 வயது மகனுடன் தனியே வசித்து வந்தார். அப்போது, சதீஷுக்கும், ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

ராதாவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில், சதீஷுக்கு, பெறறோர் உறவினர் பெண்ணுடம் திருமண நிச்சயம் செய்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதன் காரணமாக சதீஷ், ராதாவுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சதீஷ் மீது ஆத்திரத்தில் இருந்த ராதா, திருமணத்திற்கு முதல் நாளான சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வர கூறியுள்ளார்.

வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு… புதுமாப்பிள்ளையை தீ வைத்து எரித்த கள்ளக்காதலி!

அதன்படி, ராதா வீட்டிற்கு சென்ற சதிஷ், அவருடன் பேசி விட்டு அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது, ராதா திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்தார். உடலில் தீப்பற்றியதால் அலறியடித்து தெருவுக்கு ஒடிய சதீஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த, கே.புதுப்பட்டி போலீசார் ராதாவை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் தீவைத்து எரிக்க முயன்றதாக ராதா தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் ராதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.