கொடைக்கானலை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப்பார்க்க ஏற்பாடு
Nov 1, 2020, 17:24 IST1604231688000
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப்பார்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, மத்திய அரசின் அனுமதியுடன் இந்த சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஓய்வுபெற்ற விமான ஓட்டிகளை கொண்டு, வரும் திங்கள் முதல் புதன் கிழமை வரை ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற உள்ளது. இதில், தனி நபர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், புதிதாக திருமணமான தேனிலவு ஜோடிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.