திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி, ராணுவ வீரர் பலி!

 

திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி, ராணுவ வீரர் பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மின்சாரம் தாக்கி ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள மணக்கரை பகுதியை சேர்ந்தவர் மது (38). ராணுவ வீரரான இவர், ஹரியானாவில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஶ்ரீதேவி(32). காவலராக பணிபுரிந்து வருகிறார். மது விடுமுறைக்காக, கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், மது நேற்று தனது உறவினரின் திருமணத்திற்காக வீட்டில் மாவிலை தோரணங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி, ராணுவ வீரர் பலி!

அப்போது, அங்கு அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த மின்விளக்கில் மின்கசிவு ஏற்பட்டு, மது மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தரையில் தூக்கிவீசப்பட்ட, மது படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மது உயிரிழந்தார்.தகவல் அறிந்த இரணியல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் குறத்துவழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.