மனைவியை கொலை செய்துவிட்டு, மாயமானதாக நாடகம்… 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய ராணுவ வீரர்!

 

மனைவியை கொலை செய்துவிட்டு, மாயமானதாக நாடகம்… 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய ராணுவ வீரர்!

தேனி

தேனியில் மனைவியை அடித்துக்கொன்று விட்டு, அவர் மாயமானதாக 2 வருடங்களாக நாடகமாடிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

தேனி பாரஸ்ட் ரோடு 12வது தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் ஈஸ்வரன் (25). ராணுவ வீரரான இவருக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த செல்வம் மகள் கிரிஜா பாண்டிக்கும் (23) கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களிலேயே ஈஸ்வரன் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக, கிரிஜ பாண்டியின் பெற்றோர், உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, தனது குடும்பத்தினருடன் பேசாவிட்டால் சேர்ந்து வாழ்வதாக ஈஸ்வரன் தெரிவித்தன் அடிப்படையில் ஈஸ்வரனும் ,கிரிஜா பாண்டியும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதனால் கிரிஜா பாண்டி, நீண்ட காலமாக தனது குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், மருமகளை ஈஸ்வரன் கொடுமைப் படுத்துவதாக சிவகுமார் கூறியதால் செல்வம், அவர் வசிக்கும் பகுதிக்கு சென்றுபார்த்தார். அப்போது, பல மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறியதால் சந்தேகமடைந்த. செல்வம் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தனிப்படை போலீசார் ராணுவ வீரர் ஈஸ்வரனை தேடி வந்தனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு, மாயமானதாக நாடகம்… 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய ராணுவ வீரர்!

அவர் திருவாரூரில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், ஈஸ்வரனை கைதுசெய்து தேனி அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது, கடந்த 2019 டிசம்பர் 25ஆம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது தான் அடித்ததில் தலையில் பலத்த காயமடைந்த கிரிஜா பாண்டி உயிரிழந்து விட்டதாகவும் கூறினார். மேலும், காவராக உள்ள தனது சகோதரர் உதவியுடன், கிரிஜா பாண்டி உடலை சாக்குமூட்டையில் கட்டி, அரண்மனைப்புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் வீசியதாகவும் கூறினார்.

இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தில் முல்லை பெரியாற்றில் தீயணைப்பு துறை உதவியுடன் ,தனிப்படையினர் தேடியும் உடல் கிடைக்கவில்லை. மேலும், ஈஸ்வரன் மனைவியின் சடலம் வேறுஇடத்தில் புதைத்து உள்ளதாக முன்னுக்கு பின் முறணாக பதில் அளித்துள்ளதால், சடலம் எங்கு உள்ளது? என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. .