நெல்லையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

 

நெல்லையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

நெல்லை

நெல்லையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் குமரேசன் (39). பாளையங்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்த இவர், காவல்துறை அதிகாரிகளின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தங்கபுஷ்பம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசன், நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நெல்லையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குமரேசன் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், துணை ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.