ரஜினியின் முடிவுக்கு என் ஆதரவை முழு மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன்- அர்ஜூனமூர்த்தி
Dec 29, 2020, 20:19 IST1609253394000
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் அது குறித்த முக்கிய அறிவிப்பை டிச.31ம் தேதி வெளியிடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.
தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் ரஜினிகாந்த் நியமித்திருந்தார். ஆனால் உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என இன்று ரஜினிகாந்த் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் ரஜினியின் நண்பரும் ஆதரவாளருமான அர்ஜூன மூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினியின் இதயம் தற்போது மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறது என்பதை நன்றாக அறிவேன். ரஜினியின் முடிவுக்கு என் ஆதரவை முழு மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.