அர்ஜுனா, கேல் ரத்னா பரிசுத்தொகை அதிகரிப்பு!

 

அர்ஜுனா, கேல் ரத்னா பரிசுத்தொகை அதிகரிப்பு!

அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருதின் பரிசுத்தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

அர்ஜுனா, கேல் ரத்னா பரிசுத்தொகை அதிகரிப்பு!

விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது போன்றவை விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு துறை சார்ந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் கூட தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் உள்ளிட்டோர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

அர்ஜுனா, கேல் ரத்னா பரிசுத்தொகை அதிகரிப்பு!

இந்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது பரிசுத்தொகை ரூ.15 லட்சமாகவும், கேல் ரத்னா விருது ரூ. 25 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார், மேஜர் தியான் சந்த் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய கிரண் ரிஜிஜு இவ்வாறு தெரிவித்துள்ளார்.