“கமல்ஹாசன் காந்திக்கு ‘பி’டீம் அல்ல; காரல்மார்க்ஸ்க்கு ‘பி’ டீம்”

 

“கமல்ஹாசன் காந்திக்கு ‘பி’டீம் அல்ல; காரல்மார்க்ஸ்க்கு ‘பி’ டீம்”

ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றி பெற வேண்டியும், 234 தொகுதிகளில் வெற்றி பெற்று ரஜினி ஆட்சி அமைக்க வேண்டியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டியை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். உஜ்வாலா திட்டத்தில் தமிழக அரசு அதிக பயன் பெற்றுள்ளது. சமையல் எரிவாயுக்கான மானியத்தை அதிகரித்து வழங்க வேண்டும். மோடி ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே மானியம் கொடுக்கிறார்.

“கமல்ஹாசன் காந்திக்கு ‘பி’டீம் அல்ல; காரல்மார்க்ஸ்க்கு ‘பி’ டீம்”

வரும் 31ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் சின்னம் குறித்து அறிவிப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த முதல்வரின் கருத்துக்கு நன்றி. பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். கமலஹாசன் அரசியலுக்கு வந்த பின் சில விஷயங்களில் சரியாக இருக்க வேண்டியது அவரது பொறுப்பு. ரஜினியின் ஆன்மிக அரசியலை ஏற்று கமல் வருவதாக இருந்தால் அவரை வரவேற்கிறோம். ஆனால் ஆன்மீக அரசியல் தான் தலைமை ஏற்க வேண்டும்.

அனைத்து தரப்பையும் ஆதரிப்பது ஆன்மீக அரசியல். லஞ்ச ஊழலை அழிப்பது ஆன்மீக அரசியல். மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் ரஜனி ஆட்சி. திமுக, அதிமுகவிற்கு பலம் இல்லை . ரஜினிக்கு மட்டுமே பலம் உள்ளது. அனைத்துக் கட்சி தொண்டர்களும் ரஜினியின் ஆன்மிக கட்சிக்கு வந்துவிடுவார்கள்” என தெரிவித்தார்.