ரஜினியை 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிப்பெற செய்வோம்: அர்ஜூன் சம்பத்

 

ரஜினியை 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிப்பெற செய்வோம்: அர்ஜூன் சம்பத்

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கடந்த 3ம் தேதி அதிரடியாக அறிவித்தார். தமிழர்களுக்காக தனது உயிரே போனாலும் பரவாயில்லை சந்தோஷம் தான் எனக்கூறிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வந்து வெற்றிபெற்றால் அது மக்களின் வெற்றி, தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்விதான் எனக் கூறியிருந்தார்.

ரஜினியை 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிப்பெற செய்வோம்: அர்ஜூன் சம்பத்

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், “தமிழகத்தில் நீண்ட நாட்களாக காத்திருந்த மக்களுக்கு இப்போது திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் வந்துவிட்டது. அதனை மக்கள் விரும்புகின்றார்கள். ஆன்மீக அரசியல் மையம் கொண்டு விட்டது. மேற்கு வங்கம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி அரசியல் சாசனத்தினை மீறி இந்திய நாட்டின் இறையான்மைக்கு விரோதமாக வன்முறை அரசியல் நடத்துகின்றார். எனவே மம்தா பானர்ஜி ஆட்சியினை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் ரஜினிகாந்த் வருகையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர் குறிப்பாக தென்மாவட்ட மக்கள் அரசியல் வருகையை வரவேற்று வருகின்றனர். தமிழகத்தில் 234-தொகுதிகளிலும் ரஜினிகாந்த் கட்சியினை ஆதரித்து இந்து மக்கள் கட்சி பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்யும். இந்து மக்கள் கட்சியினை பொறுத்தவரையில் மத்தியில் மோடிக்கும் தமிழகத்தில் ரஜினிகாந்த்துக்கும் ஆதரவு. நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கபோகும் கட்சியில் இந்து மக்கள் கட்சி தொடர்ந்து பயணிக்கும்” எனக் கூறினார்.