இந்து கடவுள்களை இழிவுப்படுத்திய பெரியாருக்கு சிலை வைக்க கூடாது; சர்ச்சையை கிளப்பும் அர்ஜூன் சம்பத்!

 

இந்து கடவுள்களை இழிவுப்படுத்திய பெரியாருக்கு சிலை வைக்க கூடாது; சர்ச்சையை கிளப்பும் அர்ஜூன் சம்பத்!

திருச்சியில் 95 அடியில் பெரியாருக்கு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இந்து கடவுள்களை இழிவுப்படுத்திய பெரியாருக்கு சிலை வைக்க கூடாது; சர்ச்சையை கிளப்பும் அர்ஜூன் சம்பத்!

திருச்சி சிறுகனூரில் பெரியாருக்கு 95 அடியில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதற்கு தடை விதிக்கக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அர்ஜூன் சம்பத் மனு அளித்துள்ளார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், வாழ்நாள் முழுவதும் இந்து கடவுள்களை இழிவு படுத்தியவர் பெரியார். அவருடன் ஒட்டிக்கொண்ட வீரமணி நடத்தும் பெரியார் மணியம்மை அறக்கட்டளையில் மிகப்பெரும் ஊழல் நடக்கிறது. அதையெல்லாம் அரசுடமையாக்க வேண்டும். திருச்சியில் பெரியார் சிலை அமைப்பதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை சீர்குலைக்கும் விதமாக பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், சுதந்திர நாளை கருப்புக்கொடி ஏந்தி போராடிய பெரியாரை எப்படி சமூக நீதி காத்தவர் என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய அர்ஜூன் சம்பத், இதே சட்டசபையில் பெரியாரை கைது செய்யச் சொல்லி பேசியவர் கருணாநிதி. பெரியாருக்கு சிலை அமைத்தால் திமுகவில் உள்ள ஒரு கோடி இந்துக்களின் மனம் புண்படும் என்றும் கூறினார்.