இவை எல்லாம் சரியான முடிவுகளா? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

 

இவை எல்லாம் சரியான முடிவுகளா? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

கொரோனா காலத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டது என்று கூறும் பிரதமர், நான்கு மணி நேர முன் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நல்ல முடிவு என்று கூறுவாரா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவை எல்லாம் சரியான முடிவுகளா? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது?
நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு – சரியான முடிவா?

http://


கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள், சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே – சரியான முடிவா?
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, வீட்டை இழந்து பட்டினி கிடந்தார்களே – சரியான முடிவா?

http://


ரயில் இன்றி, பஸ் இன்றி பல லட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே – சரியான முடிவின் விளைவா?
பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே – இது சரியான முடிவுகளின் பயனா?

இவை எல்லாம் சரியான முடிவுகளா? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே – சரியான முடிவுகளின் பயனா?” என்று கேட்டுள்ளார்.